search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ் நிலையம்"

    • ராமநாதபுரத்தில் புழுதி பறக்கும் பழைய பஸ் நிலையத்தால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
    • இதனால் பயணிகள் மூச்சுவிட முடியாமல் சிரமப்படுகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகராட்சி புதிய பஸ்ஸ்டாண்டிலிருந்து வெளி மாவட்டங்கள், உள் ளூர் பகுதிகளுக்கு தினமும் 300-க்கு மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அங்கு ஆயிரத்துக்கும் மேற் பட்ட பயணிகள் வந்து சென்றனர். தற்போது ரூ.20 கோடியில் புதிய பஸ் ஸ்டா ண்ட் வாரச்சந்தை திடல் வரை விரிவாக்கம் செய்யும் பணி நடக்கிறது.

    ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப் பணியால் தற்போது சந்தை திடல், பழைய பஸ் ஸ்டா ண்ட் ஆகிய இடங்களில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அங்கு குவிந்துள்ள மண லால் காற்றில் புழுதி பறந்து மூச்சுவிட முடியாமல் பயணிகள் சிரமப்படுகின்ற னர். இலவச கழிப்பறை, குடிநீர் வசதியின்றி பயணி கள் சிரமப்படுகின்றனர்.

    கட்டண கழிப்பறையில் கூடுதல் கட்டணம் வசூலிப் பதாகவும் புகார் எழுந் துள்ளது. இதையடுத்து சந்தை திடல் வளாகம், பழைய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவ்விடங்களில் மண் அதி களவில் குவிந்துள்ளதால் காற்றில் புழுதி பறந்து அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக் கிறது.

    இதனால் பயணிகள் மூச்சுவிட முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் டூவீலர்களை கண்டபடி பஸ் ஸ்டாண்ட் வளாகத்திற்குள் நிறுத்துவதால் பஸ்கள் வெளியே செல்வதில் சிக் கல் ஏற்படுகிறது.

    சந்தை திடல், பழை பஸ் ஸ்டாண்டில் புழுதி பறக்காத வகையில் தரைத்தளத்தை செப்பனிட வேண்டும். இலவச கழிப்பறை, குடிநீர் வசதி செய்து தர வேண்டும். பிற வாகனங்கள் உள்ளே வந்து செல்வதற்கு தடை விதிக்கவும் நகராட்சி, போலீ சார் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தினர்.

    • வடசேரி கனகமூலம் சந்தை தற்காலிகமாக மாற்றம்
    • வடசேரி பகுதியில் ரூ.55 கோடி செலவில் பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் மேயர் மகேஷ் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அந்தப்பகுதியில் செயல்பட்டு வரும் காய்கறி சந்தையை ஆய்வு செய்த அவர், நீராளி குளத்தையும் பார்வை யிட்டார். அதை புணரமைப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    பின்னர் அந்த பகுதியில் உள்ள பூங்காவை ஆய்வு செய்த மேயர் மகேஷ், நீராளி குளத்தை சுற்றியுள்ள மைதா னத்தையும் பார்வையிட்டார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- வடிவீஸ்வரம் பகுதியில் காய்கறி சந்தை பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் இன்றி செயல்பட்டு வருகிறது. நீராளி குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    வடசேரி பகுதியில் ரூ.55 கோடி செலவில் பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதனால் வடசேரி கனகமூலம் சந்தையை தற்காலிகமாக இடமாற்றம் செய்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்.

    ஏற்கனவே வடசேரி சந்தையில் 120 கடைகள் காலியாக தான் இருந்து வருகிறது. சந்தையில் வியா பாரம் செய்து வரும் வியா பாரிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையிலும், வியாபாரம் பாதிக்காத வகையிலும் இடம் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அதற்கான இடம் ஒதுக்கீடு செய்யப்படும்.

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் குடிநீர் பிரச்சனையை சமாளிக்க நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போர்வேல்கள் மூலமாகவும், குடிநீர் லாரிகள் மூலமாகவும் தண்ணீர் சப்ளை செய்யப் பட்டு வருகிறது. புத்தன் அணையிலிருந்து வெள் ளோட்டமாக கொண்டு வரப்படும் தண்ணீரை, கிருஷ்ணன் கோவில் சுத்திகரிப்பு நிலையத்தி லிருந்து பொது மக்களுக்கு வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகி றோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது ஆணையாளர் ஆனந்த மோகன், இன்ஜினியர் பாலசுப்பிரமணியன், நகர் அதிகாரி ராம்குமார், தி.மு.க. மாநகரச் செயலாளர் ஆனந்த், கவுன்சிலர் கோபால் சுப்ரமணியன், சுகாதார ஆய்வாளர் ஜான், இளை ஞரணி தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்.

    • கடைகளில் ஷட்டர்களை 10 நாட்களுக்குள் அமைக்காவிட்டால் சீல் வைக்க உத்தரவு
    • வடசேரி பஸ் நிலைய விரிவாக்க பணிகள் நடைபெறுகிறது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் மேயர் மகேஷ் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒரு சில கடைகளில் நடைபாதையில் பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தது. அதை உடனடியாக அகற்ற மேயர் மகேஷ் உத்தரவிட்டார்.

    பின்னர் கடைகளில் ஷட்டர்கள் இல்லாமல் சீட்டுகளால் மூடப்பட்டு இருந்தது. அதை உடனடியாக மாற்றிவிட்டு ஷட்டங்கள் அமைக்க உத்தரவிட்டார். 10 நாட்களுக்குள் ஷட்டர் அமைக்காத கடைகளை சீல் வைக்கவும் மேயர் மகேஷ் உத்தரவிட்டார். மேல் கூரை சேதமடைந்ததை சீரமைக்க வும் அறிவுறுத்தினார்.

    குடிநீர் தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு இல்லாமல் இருந்தது. அந்த தொட்டியை உடனடியாக மாற்றி விட்டு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்க மேயர் மகேஷ் உத்தரவிட்டார். தாய்மார்கள் பாலூட்டும் அறையை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மேல் கூரை சேதமடைந்து இருந்தது.

    அந்த மேல்கூரையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்வதுடன் அங்கு இருக்கைகள் அமைக்கவும் அறிவுறுத்தினார். அந்த தாய்மார்கள் பாலூட்டும் அறையை இரவு 9 மணிக்கு மேல் மூடி பராமரிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் கட்டண கழிப்பறையை பார்வையிட்டார்.

    கழிவறை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து அங்கிருந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியிடம் மகேஷ் குறைகளை கேட்டு அறிந்தார். மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டு வரும் கழிவறையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அந்த கட்டுமான பணியை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து பஸ் நிலையத்தையொட்டியுள்ள வடசேரி கூட்டுறவு பண்டகசாலை பல்பொருள் அங்காடியை ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் தங்களுக்கு பாமாயில் வழங்கவில்லை என்றும், பொருட்கள் எடை குறைவாக வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டினார்கள். பின்னர் வடசேரி பஸ்நிலையம் விரிவாக்க பணிகள் நடைபெறுவதையடுத்து வடசேரி கனக மூலம் சந்தையில் செயல்படும் கடைகளை அண்ணா பஸ்நிலையத்திற்கு மாற்றுவது தொடர்பாக ஆய்வு செய்தார். தற்காலிக கடைகளை எந்த பகுதியில் அமைக்கலாம் என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண் டார்.

    அப்போது பஸ் நிலையத்தின் சுரங்க நடைபாதையையொட்டியுள்ள காலி இடத்தில் தற்காலக கடைகளை அமைப்பது தொடர்பாக ஆலோசிக் கப்பட்டது. பஸ் நிலை யத்திற்குள் இருந்த இருசக்கர வாகனங்களையும் உடனடியாக அப்புறப்படுத்த மேயர் மகேஷ் அறிவுறுத்தினார்.

    காமராஜர் பில்டிங்கில் செயல்பட்டு வரும் கடைகளையும் ஆய்வு செய்தார். கட்டிடத்தின் முன் பகுதியில் வேறு நபர்கள் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்று கூறினார். மேலும் அண்ணா பஸ் நிலையத்தில் கட்டண பார்க்கிங் வசதி ஏற்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொண்டார். ஆய்வின்போது என்ஜினீயர் பாலசுப்ரமணியன், நகர்நல அதிகாரி ராம்குமார், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், கவுன்சிலர் ரோஸிட்டா, இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன், காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார், மாநகராட்சி மண்டல தலைவர் செல்வ குமார் மற்றும் திருமால், தி.மு.க. நிர்வாகி சரவணன் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார்.
    • மர்மமான முறையில் இறந்து கிடந்த முதியவர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகே சேந்தநாடு பஸ் நிலையத்தில் நேற்று இரவு அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார். இதனையடுத்து இன்று காலை பஸ் நிலையத்திற்கு வந்த பயணிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்த முதியவர் உடலை பார்த்து இதுகுறித்து திருநாவலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்த முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதனையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து மர்மமான முறையில் இறந்து கிடந்த முதியவர் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போக்குவரத்து போலீசார் சோதனையில் சிக்கியது
    • சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் பகுதியில் போக்குவரத்து போலீசார் அதிரடி வாகன சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    போக்குவரத்து விதி முறைகளை மீறுபவர்க ளுக்கும் போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள். மேலும் வடசேரி பஸ் நிலை யம், அண்ணா பஸ் நிலையத்திற்குள் நிறுத்தப் பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்து வருகி றார்கள்.

    போக்குவரத்துக்கு இடையூறாக நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. வடசேரி பஸ் நிலைய பகுதியில் கடந்த 12-ந்தேதி மோட்டார் சைக்கிள் ஒன்று நின்றது. அப்போது அங்கு சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசார் அந்த மோட்டார் சைக்கிளுக்கு நோ பார்க்கிங்கில் நிறுத்தியதற்காக ரூ.500 அபராதம் விதித்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினமும் அங்கு சோதனை மேற்கொண்ட போது அதே இடத்தில் அந்த மோட்டார் சைக்கிள் நின்று கொண்டிருந்தது. போலீசார் மீண்டும் ரூ.500 அபராதம் விதித்தனர். இந்த நிலையில் நேற்றும் அதே இடத்தில் நின்றது. போலீசார் அந்த வாகனத்தின் நம்பர் பிளேட்டை ஸ்கேன் செய்து அபராதம் விதித்தனர். தொடர்ந்து 3 நாட்களாக ஒரே பகுதியில் நோ பார்க்கிங்கில் மோட்டார் சைக்கிள் நின்று கொண்டிருந்ததால் போலீசார் அந்த வாகனத்தின் உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசிய போது அவர் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த தங்கவேல் என்பது தெரியவந்தது. அவர் தனது மோட்டார் சைக்கிளை கடந்த வாரம் மணிமேடை பகுதியில் கடைக்கு வந்தபோது அந்த பகுதியில் நிறுத்தி இருந்ததாகவும் சாவியை எடுக்காமல் கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை என்றும் தெரிவித்தார்.

    இது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே தங்கவேலிடம் அவரது மோட்டார் சைக்கிள் வடசேரி பஸ் நிலையம் பகுதியில் நிற்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் வடசேரி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வடசேரி போலீசாரும் சம்ப இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பஸ் நிலையத்தில் நின்ற மோட்டார் சைக்கிளை வடசேரி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    ஏற்கனவே மோட்டார் சைக்கிள் மாயமானது குறித்து அதன் உரிமையாளர் தங்கவேல் புகார் செய்திருந்த நிலையில் அந்த மோட்டார் சைக்கிளை ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்ட னர்.

    அந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்ற நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மணிமேடை மற்றும் மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • இருசக்கர வாகனங்களை நிறுத்தினால் பறிமுதல்
    • 2 மணி நேர ஆய்வுக்கு பின் மேயர் மகேஷ் தகவல்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் ரூ.2 கோடியே 50 லட்சத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மேயர் மகேஷ் இன்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதைத்தொடர்ந்து பஸ் நிலையத்தில் உள்ள கழிவ றையை பார்வையிட்டார். கழிவறையை சுத்தமாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தினார். கடைகளில் ஆக்கிரமித்து கட்டி இருந்ததை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.

    மதுபோதையில் சிலர் அங்கேயே படுத்திருந்தனர். உடனே 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து அவர்களை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அம்மா உணவகத்தில் வழங்கப்பட்டு வரும் உணவின் தரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சுமார் 2 மணி நேரம் பஸ் நிலையம் முழுவதும் ஆய்வு பணியை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து உள்ளூர், வெளியூர் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான பயணி கள் வந்து செல்கிறார்கள். இந்த பஸ் நிலையம் தற்பொழுது ரூ.2.50 கோடி செலவில் சீரமைக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே தமிழக அரசு வடசேரியில் ஒருங்கி ணைந்த பஸ் நிலையம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. அந்த பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

    பஸ் நிலையத்தில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்து வதற்கு தடை செய்யப்பட் டுள்ளது. ஆனால் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட் டுள்ளது. அந்த இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்ய போக்குவரத்து போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    இருசக்கர வாகனங்களை பஸ் நிலையத்திற்குள் நிறுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அம்மா உணவகத்தில் பில்லிங் மெஷின் செயல்படாமல் உள்ளதாக தெரிவித்தனர். அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். குருஞ்சி பஜார் மற்றும் பஸ் நிலை யத்தில் ஆக்கிரமிப்புகள் உள்ளது. பாரபட்சமின்றி அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

    இரவு நேரங்களில் பயணிகளுக்கு குடிபோதையில் சிலர் இடையூறு செய்வதாக புகார் வந்துள்ளது. சிலர் குடிபோதையில் பஸ் நிலையத்தில் படுத்து தூங்கி விடுகிறார்கள்.

    குடிபோதையில் பஸ் நிலையத்தில் சுற்றி திரிபவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் இருந்து கழிவுநீர்களை இரவு நேரத்தில் பஸ் நிலை யத்திற்குள் கொட்டுவதாக புகார் வந்துள்ளது. இது தொடர்பாகவும் நடவ டிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது நகர்நல அதிகாரி ராம் மோகன், என்ஜினீயர் பால சுப்பிரமணியன், கவுன்சிலர் கலாராணி மற்றும் நிர்வாகி கள் உடன் இருந்தனர்.

    • யூனியன் அலுவலகம் அருகே காமராஜ்நகர் பஸ் நிலையம் இயங்கி வந்தது.
    • மாணவர்கள் அரை கிலோமீட்டர் தூரம் பள்ளிக்கு நடந்து செல்லும் நிலை உள்ளது.

    தென்காசி:

    நெல்லை- தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் கடந்த 2 வருடமாக நடைபெற்று வரும் சூழ்நிலையில் பாவூர்சத்திரம் யூனியன் அலுவலகம் அருகே காமராஜ் நகர் வடக்கு- தெற்கு என இரு பகுதிகளுக்கும் சேர்த்து காமராஜ்நகர் பஸ் நிலையம் இயங்கி வந்த நிலையில் தற்பொழுது அதனை அகற்றியுள்ளனர்.

    ½ கிலோ மீட்டர்

    பாவூர்சத்திரம் காமராஜ்நகர் பகுதி பொது மக்கள் மற்றும் கீழப்பாவூர் யூனியன் அலுவலகம் த.பி. சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளி மாணவ ர்கள் அனைவரும் காமராஜ் நகர் பஸ் நிலையத்தை பயன்படுத்தி வந்த நிலையில் தற்பொழுது நான்கு வழிச் சாலை பணி முடிவுற்ற நிலையில் காமராஜ்நகர் பகுதியில் புதிய பஸ் நிலையத்தை அமைக்காமல் அதிலிருந்து கிழக்கே ½ கிலோ மீட்டர் தொலைவில் பாரத ஸ்டேட் வங்கிக்கு எதிரே புதிய பஸ் நிலையம் அமைக்கப் பட்டுள்ளது.

    இதனால் அரசு பள்ளிக்கு பஸ்கள் மூலம் வரும் மாணவர்கள் அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள பஸ் நிலையத்தில் இறங்கி நடந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    கோரிக்கை

    எனவே குடியிருப்புகள் மற்றும் அரசு அலுவலகம் பள்ளி இருக்கும் பகுதியில் பஸ் நிலையத்தை மாற்றி அமைக்க வேண்டும் என பாவூர்சத்திரம் த.பி. சொக்கலால் அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் காமராஜ் நகர் குடியிருப்பு வாசிகளின் சார்பில் கோரி க்கை வைக்கப்பட்டுள்ளது.

    எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    • பஸ் நிலையம் விரிவாக்கப்பணிகள் ரூ.20 கோடி மதிப்பில் தொடங்கியது.
    • பொதுமக்களுக்கு குடிநீர், தற்காலிக கழிவறை வசதி உள்ளிட்டவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பஸ் நிலையம் விரிவாக்கப் பணிகள் ரூ.20 கோடி மதிப்பில் தொடங்கியதால், 2 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரி வித்துள்ளது. இது குறித்து ராமநாதபுரம் நகராட்சி தலைவர் கார்மேகம் கூறியதாவது:-

    நான் ராமநாதபுரம் மையப்பகுதியில் அமைந் துள்ள புதிய பஸ் நிலையம் கட்டிடங்கள், கடைகள் மற்றும் வளாக பகுதியி லுள்ள சந்தைக்கடை ஆகி யவை சேதமடைந்து காணப் பட்டது. தி.மு.க. அரசு வந்ததும் புதிய பஸ் நிலையம் விரிவாக்கப் பணிகளுக்கு அரசானை வெளியிடப்பட்டு, முதற் கட்டமாக ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

    இதில் புதிதாக ஒருங் கிணைந்த பஸ் நிலையம் மற்றும் கடைகள், சந்தை கடைகள், அடிப்படை வசதி கள் அடங்கிய உள்கட்ட மைப்பு வசதிகள் அமைக்கப் பட உள்ளன. இந்நிலையில் சேதமடைந்த பழைய கட்டிடங்கள், 50-க்கும் மேற் பட்ட கடைகள், சந்தைகடை கட்டிடங்கள், கழிப்பறைகள், வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட வைகளை அகற் றும் பணி உள்ளிட்ட சீர மைப்பு பணிகள் தொடங்கி யுள்ளது. இந்த பணிகள் முழுமை யாக நிறைவடையும் வரை, தற்காலிக பஸ் நிலையம் மற்றும் பொதுமக்கள் சிரம மின்றி சென்று வர போக்கு வரத்து ஏற்பாடு செய்யும்படி கலெக் டர் விஷ்ணுசந்திரன், காதர்பாட்ஷா எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம் ஆகி யோரிடம் நகராட்சி நிர்வா கம் சார்பில் கோரிக்கை விடப்பட்டு, அவர்கள் ஆய்வு செய்தனர்.

    இதனையடுத்து நகராட்சி சார்பில் தற்போது ரெயில் வே நிலையம் அருகிலுள்ள பழைய பஸ் நிலையம், மதுரை ரோட்டில் உள்ள மூலக்கொத்தலம் பகுதியி லுள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி ஆகிய இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பஸ் கள் வந்து செல்ல மற்றும் நிறுத்துவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு குடிநீர், தற்காலிக கழிவறை வசதி உள்ளிட்டவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அரசு பஸ் மற்றும் மினிபஸ் டிரைவர்களுக்குள் பஸ் நிறுத்தம் தொடர்பாக தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வந்தது.
    • மினிபஸ் உரிமையாளர்கள்,அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கன்னியாகுமரி :

    திங்கள் நகர் பஸ் நிலையத்தில் இருந்து குமரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும், சென்னை உட்பட பல இடங்களுக்கும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் செல்கின்றன.

    பஸ் நிலையத்தில் அரசு பஸ் டிரைவர்களுக்கும், மினிபஸ் டிரைவர்களுக்கும் பஸ் நிறுத்தம் தொடர்பாக தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வந்தது.

    நேற்று மதியம் மினிபஸ் பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வரமுடியாத படி அரசு பேருந்து மறித்து நின்றதால் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனை அடுத்து திங்கள் நகர் பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் இரணியல் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் தலைமையில் பேரூராட்சி தலைவர் சுமன், வர்த்தக சங்க நிர்வாகிகள் மினிபஸ் உரிமையாளர்கள்,அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அரசு பஸ் மினிபஸ் மணவாளக்குறிச்சி, மண்டை க்காடு, குளச்சல் வழி செல்லும் பஸ்கள் சமய குறிப்பு அலுவலகம் அருகே இருந்து புறப்பட்டு செல்ல வேண்டும் என்று மினிபஸ் உரிமையாளர்கள் வலியுறுத்தினர். புறக்காவல் நிலையத்தில் அருகே நாகர்கோவில் நோக்கி சுற்றி செல்லும் அரசு பேருந்து நின்று செல்ல வேண்டும் என்று வர்த்தகர்கள் வலியுறுத்தினர்.

    அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், மினிபஸ் டிரைவர்கள் அரசு பஸ் செல்ல விடா மல் மறித்து நிற்பதாக புகார் கூறினர். அவ்வாறு செய்தால் இனி அபராதம் விதிக்கப்படும் என்று இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் எச்சரிக்கை செய்தார்.

    தனியார் வாகனங்கள் பேருந்து நிலையத்தில் உள்ளே வரக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைக்க பேரூராட்சி தலைவர் சுமனிடம் பொது மக்கள் கூறினார். இதனை அடுத்து பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்பட்டது. அடுத்து பஸ்கள் அதற்கு உரிய இடங்களில் நிறுத்த நடவடிக்கை எடுக்கபட்டது.

    • ராமநாதபுரம் பழைய பஸ் நிலையத்தை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    • 300-க்கும் அதிக மான பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் விரிவாக்க பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. இதனை கருத்தில் கொண்டு பஸ்கள் நின்று செல்லும் வகையில் ரெயில் நிலையம் அருகே பழைய பஸ் நிலையத்தை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.

    ராமநாதபுரம் நகராட்சி புதிய பஸ் நிலையத்தில் இருந்து 300-க்கும் அதிக மான பஸ்கள் இயக்கப்படு கின்றன. போதிய பராம ரிப்பின்றி பஸ் நிலைய தரைத்தளம் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. பிளாட்பார கடைகளில் கூரை பூச்சு பெயர்ந்து அடிக்கடி கீழே விழுகிறது.

    இந்த நிலையில் ரூ.20 கோடியில் பஸ் நிலையத்தை சீரமைத்து சந்தை திடல் வரை விரிவுபடுத்தும் பணி விரைவில் தொடங்க உள்ளது. அதனை முன்னிட்டு தற்காலிகமாக பயணிகள் வசதிக்காக பழைய பஸ் நிலையம், மூலக்கொத்தளம் பகுதிகளில் இருந்து பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளனர்.

    இதையடுத்து ரெயில் நிலையம் அருகே உள்ள பழைய பஸ் நிலையத்தில் புதிதாக தரைத்தளம் அமைத்தல், கழிவறை செப்பனிடுதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் நிறை வடைந்து செயல்பட தொடங்கியதும் புதிய பஸ் நிலையத்தில் கட்டிடங்கள் அகற்றப்பட்டு விரிவாக்க பணிகள் விரைவில் தொடங்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மாடுகள் பஸ் நிலையத்தில் சாணத்தை இட்டு செல்வதால், பயணிகள் அவதியடைந்தனர்.
    • தினமும் பஸ் நிலையத்தை சுத்தம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ஊட்டி,

    நெல்லியாளம் நகராட்சியின் பந்தலூர் பஸ் நிலையத்துக்கு தினமும் பந்தலூர், உப்பட்டி, கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, சேரம்பாடி, தாளூர், பாட்டவயல் மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ்கள் கூடலூரில் இருந்து, பந்தலூர் பஸ் நிலையத்துக்கு வந்து செல்கின்றன.

    இங்கு தினமும் ஏராளமான மாடுகள் இரவு முழுவதும் பஸ் நிலையத்தில் ஓய்வு எடுத்து, சாணத்தை இட்டு செல்வதால், பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். போதிய பாதுகாப்பு, பராமரிப்பு இல்லாததால், மாடுகள் சுற்றி வருகின்றன.

    எனவே நகராட்சி நிர்வாகம் பஸ் நிலையத்துக்குள் மாடுகள் வராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பஜார்பகுதி, பஸ் நிலையம் மற்றும் பொது இடங்களில் சுற்றி திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு நெல்லியாளம் நகராட்சி அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தினமும் பஸ் நிலையத்தை சுத்தம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
    • பட்டா கத்தியுடன் பஸ் நிலையத்தில் வாலிபர் உலா வந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பஸ் நிலையத்தில் மதுபோதையில் பட்டா கத்தியுடன் ஒருவர் சுற்றி திரிவதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு அங்கிருந்தவர்கள் தகவல் தெரிவித்தனர்.

    அதன் தகவலின் பேரில், பரமத்திவேலுார் போலீசார் அந்த பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது, மதுபோதையில் பட்டா கத்தியுடன் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து, போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், அவர் ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறையைச் சேர்ந்த முத்து (வயது 32) என்பதும், தற்போது சமையல் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.

    இவர் பரமத்திவேலூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்ததால், அடிக்கடி இப்பகுதிக்கு வந்து சென்றதாக கூறியுள்ளார்.

    மேலும் அந்த பெண்ணை, சில நாட்களாக முத்து செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது, அவர் போனை எடுக்காததால், அந்த பெண்ணை பார்ப்பதற்காக நேற்று பரமத்திவேலூருக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து போலீசார், அவர் மறைத்து வைத்திருந்த ஒரு பெரிய பட்டா கத்தி மற்றும் ஒரு சிறிய கத்தியையும் பறிமுதல் செய்தனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, முத்துவை கைது செய்த போலீசார், எதற்காக அவர் பட்டாக் கத்தியுடன் பரமத்திவேலூர் வந்தார்? தொடர்ந்து போன் செய்தும், அந்த பெண் போனை எடுக்காததால் அவரை கொலை செய்ய கத்தியுடன் வந்தாரா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

    இதை தொடர்த்து கைது செய்யப்பட்ட வாலிபரை பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். பட்டா கத்தியுடன் பஸ் நிலையத்தில் வாலிபர் உலா வந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×